News December 10, 2024

திருவண்ணாமலைக்கு 1982 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் டிசம்பர் 12 ஆம் தேதி 269 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் 13ஆம் தேதி 643 பேருந்துகளும், 14 ஆம் தேதி 801 பேருந்துகளும், 15ஆம் தேதி 269 பேருந்துகளும் என மொத்தம் 1982 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

Similar News

News March 3, 2026

திருப்போரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு!

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் நேற்று 02.03.2026 விருப்ப மனுவை அளித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்புச் செழியன் மற்றும் திமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 3, 2026

செங்கை அருகே கோர விபத்து.. ஒருவர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (19). இவர் நேற்று இவரது உறவினர் பூர்ணிமா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாடம்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் மேம்பாலத்தில் செல்லும்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அன்பரசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

News March 3, 2026

செங்கல்பட்டு இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!