News April 1, 2024
திரும்ப பெறப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வு

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கசாவடியில் கட்டணம் உயரும் என மத்திய நெடுஞ்சாலைதுறை ஆணையம் தெரிவித்திருந்தது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி மற்றும் ஆத்தூர் சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கட்டணம் உயரும் என சுங்கசாவடி நிர்வாகம் தரப்பில் இன்று (ஏப்ரல்-1) தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
மாமல்லபுரத்தில் கிடைத்த பழமையான கல்

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மணல் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரும் அளவிலான பழமையான கல் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் கல் அமைப்பு பழங்கால சிற்பக் கலை அல்லது கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
செங்கல்பட்டு: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

செங்கல்பட்டு மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு க்ளிக் <
News February 6, 2026
செங்கல்பட்டு: வீதிக்கு வந்த மாணவர்கள்

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள், இலவச மடிக்கணினி வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படுவதாகவும், மூன்று ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரே கல்லுாரியில் பாகுபாடு கூடாது என கூறி கோஷமிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர்கள் கலைந்து சென்றனர்.


