News April 18, 2024

திருமருகலில் குளத்தில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு

image

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஹாஜரா பேகம் தெருவை சேர்ந்தவர் பாவாஷா ஜலாலுதீன் (58). கட்டிட கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஏனங்குடி சத்திரம் குளத்தில் ஓரமாக உள்ள கட்டையில் அமர்ந்துள்ளார். திடீரென மயக்கம் ஏற்பட்டு குளத்தின் உள் தவறி விழுந்துள்ளார். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஜலாலுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருகண்ணபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 26, 2025

நாகை: வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

image

நாகை மாவட்டம் முழுவதும் குறுவை பருவத்துக்காக 95 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்ட நெல்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆகாஷ் எச்சரித்துள்ளார். SHARE NOW!

News September 26, 2025

நாகையில் சைக்கிள் போட்டி: கலெக்டர் அறிவிப்பு

image

நாகையில் அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள் நாளை நடத்தப்பட உள்ளது. வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News September 26, 2025

நாகையில் நெடுந்தூர ஓட்ட போட்டி

image

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அறிஞர் அண்ணா மரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டி எதிர்வரும் செ.28ம் தேதி காலை நாகை மீன்வளத்துறை பொறியியல் கல்லூரி முதல் கங்களாஞ்சேரி வரை நடைபெற உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அல்லாதவர், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!