News May 20, 2024

திருமண மண்டப உரிமையாளருக்கு ஆட்சியர் திடீர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வரும் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் ஆதார் அட்டை மூலம் பிறந்த தேதி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணம் நடைபெற வழிவகை செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 7, 2025

காஞ்சிபுரம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

காஞ்சிபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 7, 2025

காஞ்சி: குழந்தை வரம் பெற இந்த கோயிலுக்கு போங்க!

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் விஸ்வரூப பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்வரூப பாலமுருகன் மூலவராக உள்ளார். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 7, 2025

காஞ்சிபுரம்: உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

காஞ்சிபுரம் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!