News February 27, 2025
திருமணம் ஆகாதவிரக்தி வாலிபர் தற்கொலை

பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டி காலனியைக் சேர்ந்தவர் உதயகுமார்(22) இவர் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பல இடங்களில் பெண் பார்த்தும் தனக்கு திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.
Similar News
News July 7, 2025
பதக்கங்களை வென்று சேலம் வீரர்கள் அசத்தல்!

ஹைதராபாத்தில் கடந்த ஜூன் 26- ஆம் தேதி முதல் ஜூலை 1- ஆம் தேதி வரை நடைபெற்ற 24- வது ஜூனியர் தேசிய வூசூ சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ▶️நிகில் 1 தங்கம், 3 வெண்கலம், ▶️தர்ஷன் 1 தங்கம், 1 வெண்கலம், ▶️ஹாஸ்னி 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம், ▶️நிக்ஷிதா 1 தங்கம், 1 வெண்கலம், ▶️பிரகல்யா 1 தங்கம், 1 வெண்கலம், ▶️கார்முகிலன், மௌலிதரன் தலா 1 வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தினர்.
News July 7, 2025
சேலத்தில் 8.94 லட்சம் பேருக்கு சத்துமாவு விநியோகம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், 8.94 லட்சம் குழந்தைகளுக்கு 2205 டன் சத்துமாவு விநியோகிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்
News July 7, 2025
10ஆம் வகுப்பு தேர்ச்சி உள்ளூரில் அரசு வேலை!

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 105 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.<<16974209>>தொடர்ச்சி<<>>(1\2)