News October 30, 2025

திருமங்கலம்: ஆசிட் குடித்த பெண் பலி

image

திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள, பாண்டியன் நகரை சேர்ந்த டெய்லர் இளவரசன் மனைவி மாரீஸ்வரி வயது (58). உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர், 2 நாட்களுக்கு முன்பு ஆசிட்டை குடித்துள்ளார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் அக்டோபர் 28 நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 30, 2025

மதுரை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News October 30, 2025

மதுரை: 12th போதும் ரயில்வேயில் வேலை.. APPLY NOW

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>.
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News October 30, 2025

மதுரை: மர்ம நோயால் கல்லூரி மாணவர் தற்கொலை

image

திரு­ந­கரை சேர்ந்­தவர் ரங்­க­ரா­ஜன் மகன் விக்னேஷ்(19). இவர் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு பி.டெக் படித்து வந்­தார். கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பு இவருக்கு விப­ரீத நோய் ஏற்­பட, அது நாள­டை­வில் வெண்­குஷ்­டம் போன்று மாறிவிட்­டது. இத­னால் மன உளைச்­சலில் இருந்தவர், நேற்று வீட்­டில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இதுபற்றி திரு­ந­கர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!