News May 7, 2024
திருப்பூர்: 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துளிர் விட்ட நட்பு

திருப்பூர் மாவட்டம், குமரலிங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1969-74 வரை 55 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், மதுரை மற்றும் டில்லி, ஹைதராபாத் பகுதிகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். 55 ஆண்டுகளுக்கு முன் கற்பித்த ஆசிரியர்களும், தற்போது வயது முதிர்ந்த நிலையிலும், இந்த சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
Similar News
News April 19, 2025
குண்டடத்தில் மாயமான பெண் பிணமாக மீட்பு

குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியை சேர்ந்த சீரங்க சாமி என்பவரின் மனைவி
விசாலாட்சி (62).மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார். குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் அப்போது உப்பாறு அணையில் விசாலாட்சியை பிணமாக மீட்டனர்
News April 19, 2025
வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோயில்

திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையம் அருகே பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுக்ரீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் நினைத்தது நடக்கும், மருகு போன்ற தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 19, 2025
திருப்பூர்: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் 0421-2971117. ▶️திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் 0421-2971122. ▶️சிறுபான்மையினர் நல அலுவலர் 0421-2971130. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0421-2971128. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0421-2971116. ▶️உதவி ஆணையர் (கலால்) 0421-2971103. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0421-2971141. ▶️உதவித் திட்ட அலுவலர் (வீடுகள்&சுகாதாரம்) 0421-2971177. இதை SHARE பண்ணுங்க.