News February 25, 2026

திருப்பூர்: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

மூலனூர் அருகே உள்ள எலுகாம்வலசையை சேர்ந்தவர் சண்முகம் (45). இவர் பொன்னிவாடி ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றினார். இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் சண்முகத்தை கைது செய்தனர்.

Similar News

News February 25, 2026

திருப்பூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

திருப்பூர் மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க

News February 25, 2026

திருப்பூர்: குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கு வருமானச் சான்றிதழ் அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க.

News February 25, 2026

திருப்பூர்: டிகிரி போதும்., ரூ.55,833 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 -27 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 4ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.38,666 – ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!