News October 28, 2024

திருப்பூர்: வேன் கார் மோதி நேர்ந்த துயரம்

image

காங்கேயம் அருகே பகவதிபாளையத்திலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகிக்க மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வேன் நேற்று மதியம் காங்கேயம்-கரூர் சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் வேன் கவிழ்ந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்தன. அதேசமயம் காரில் வந்த உ.பி.யைச் சேர்ந்த நசீம் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 8, 2026

திருப்பூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, திருப்பூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News February 8, 2026

திருப்பூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 8, 2026

பல்லடம் அருகே துணிகர சம்பவம்!

image

பல்லடம் சித்தம்பலம் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை ஊழியர் யூஜின் – ஆசிரியை ஜோதா தம்பதியினர் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடப்பட்டன. கண்காணிப்பு கேமராவை துணியால் மறைத்து மர்ம நபர்கள் இந்த துணிகரத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!