News March 20, 2025

திருப்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

image

திருப்பூர், முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் ராக்கியாபாளையம் பகுதியில் பால்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மற்றும் அவருடைய மனைவியும், பால்கடைக்கு வியாபாரம் பார்க்க வந்துள்ளார். அப்போது வீட்டில் பின்பக்கம் வழியாக உள்ளே சென்ற மர்மநபர், ரூ.85 ஆயிரம் பணத்தை திருடி சென்றார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News

News August 24, 2025

காங்கேயத்தில் குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சரவணா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (28). இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் சுபாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, ஜெயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News August 23, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 23.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News August 23, 2025

திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

image

திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 24 இருசக்கர வாகனங்கள் என 35 வாகனங்கள் வரும் 26 ஆம் தேதி ஏலம் இடப்படுகிறது. அவிநாசி மடத்துபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நடைபெறும் ஏல நிகழ்ச்சிகள், ரூ.5000 முன்வைப்புத் தொகையாக செலுத்தி, ஏலத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!