News September 6, 2025

திருப்பூர்: விபத்தில் காயமான பெண் யார்?

image

திருப்பூரில் நேற்று(செப்.5) இரவு நடந்த விபத்தில், பெண் ஒருவர் காயமடைந்தார். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர், டூவீலர் மோதியதில், படுகாயமடைந்தார். இதையடுத்து, அவரை, அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு, ஏ.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பெண் யார் என தெரியாததால், அவரது புகைப்படம் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Similar News

News November 7, 2025

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

image

திருப்பூர், ஊத்துக்குளி அருகே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மைலால் (55). அவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மைலால் வேலைக்கு செல்வதற்காக புதூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

திருப்பூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)

News November 7, 2025

திருப்பூரில் நாளை விடுமுறை இல்லை

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை(நவ.8) பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த அக். 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி வாரத்தில் அக்.22ம் தேதி, மழை காரணமாக திருப்பூர் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன்படி நாளை (8-ம் தேதி) திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை கூறியுள்ளது.

error: Content is protected !!