News January 27, 2026

திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News February 4, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.04) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News February 4, 2026

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சேவூர், ஆசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், தண்ணீர்பந்தல் பாளையம், வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபா நகர், விராலிக்காடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், திம்மணையாம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News February 4, 2026

திருப்பூர்: ரயில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூர் ஊத்துக்குளி இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843) பிப் 6, 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாற்றியமைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படும். பணிகள் முடிந்த பின் அதே நிறுத்தங்களுடன் பாலக்காடு நோக்கிச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!