News December 18, 2025

திருப்பூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

Similar News

News December 21, 2025

மூலனூர்–தாராபுரம் சாலையில் இருசக்கர வாகன விபத்து

image

திருப்பூர் மாவட்டம் டிசம்பர் 20 இன்று விபத்து .விபத்தானது மூலனூர் டு தாராபுரம் சாலை தனியார் ஸ்பேர் பார்ட்ஸ் கடை அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயம். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் ஏற்றி மூலனூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் யார் என்று விவரம் தெரியவில்லை .மூலனூர் காவல்துறை விசாரணை

News December 21, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

திருப்பூர், கூலிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்த, சரவணன் என்பவரை கைது செய்தனர்.

News December 21, 2025

திருப்பூரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் நல்லோசை களமாடு கலைக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுடன் காபி வித் கலெக்டர்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

error: Content is protected !!