News December 15, 2025
திருப்பூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News April 5, 2026
திருப்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!

செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன் (65). இவர் வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் காசிராஜன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளாள். சிறுமியை திருப்பூர் GH-ல் அனுமதித்தார். திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் காசிராஜனை போக்சோவில் கைது செய்தனர்.
News April 5, 2026
திருப்பூர்: தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வரும் 23ம் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேதி சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட தொழில்துறை உதவி கமிஷ்னர் காயத்ரி அறிவித்துள்ளார். மாவட்ட தொழிலாளர்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, புகார் செய்யலாம் என்றார். 9443021877, 9944258037, 9952142578.
News April 4, 2026
திருப்பூரில் இன்று ஒரே நாளில் 48 பேர் மனு தாக்கல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட இன்று ஒரே நாளில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


