News October 25, 2024
திருப்பூர்: ரூ.10 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

வெள்ளகோவிலில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி 15ஆவது நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, வருமுன் காப்போம் ஆகிய திட்டங்களின் கீழ் 6 பணிகளை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News January 2, 2026
திருப்பூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER NEWS

திருப்பூரில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <
News January 2, 2026
பல்லடத்தில் அதிரடி நடவடிக்கை

பல்லடம் அடுத்த அறிவொளி நகர் வாய்க்கால் மேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழியே வந்த லாரி ஒன்றை மடக்கி பிடித்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து லாரியை சோதனையிட்ட போது அதில் குட்கா பொருட்கள் இருந்து தெரிய வந்தது. மேலும் லாரி மற்றும் 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News January 2, 2026
திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

திருப்பூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)


