News March 26, 2024

திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

image

திருப்பூர் ரயில் நிலையத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ரயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகளைத் தீவிரமாகச் சோதனை செய்யும் போலீசார் பணம், பரிசுப் பொருள்களை எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News October 27, 2025

திருப்பூர்: உங்கள் பகுதியில் நாளை மின்தடையா?

image

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (அக்.28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்ரப்பநகர், லிங்கமநாயக்கன்புதூர், கொங்கல்நகரம், கொங்கல் நகரம்புதூர், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன் புதூர். மூலனூர், விருகல்பட்டிபுதூர், விருகல்பட்டி பழையூர், அணிக்கடவு, ராமச்சந் திராபுரம், மரிக்கந்தை, செங்கோட கவுண்டன்புதூர், ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

News October 27, 2025

திருப்பூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 (அ) 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். (தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News October 27, 2025

திருப்பூரில் கிராம சபை கூட்டம்

image

உள்ளாட்சி தினமான வரும் நவ.1-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளிலும் கிராமசபை நடைபெற உள்ளது. இக்கிராம சபையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மணிஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!