News March 24, 2026
திருப்பூர்: யாரும் வரவேண்டாம்..! பேனரால் பரபரப்பு

திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டு ஜனசக்தி நகர் மக்கள், நில உரிமை தொடர்பான நீதிமன்ற வழக்கில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவாததைக் கண்டித்து, 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். “ஓட்டுக் கேட்க யாரும் வரவேண்டாம்” என அவர்கள் வைத்துள்ள பேனர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 30, 2026
திருப்பூரில் மது கடைகள் மூடல்

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் மணீஷ் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடையை மீறி சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 30, 2026
திருப்பூரில் ஆறு கோடியே 69 லட்ச ரூபாய் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி முதல் இன்று வரை 6 கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் 91,87,000 மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News March 30, 2026
திருப்பூரில் ஆறு கோடியே 69 லட்ச ரூபாய் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி முதல் இன்று வரை 6 கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் 91,87,000 மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


