News October 13, 2025
திருப்பூர்: மனைவி பேசாததால் தற்கொலை!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் (34). இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர், காசிபாளையம் அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள டையிங் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சூரஜ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாட்டால் 2 மாதமாக அவரது மனைவி பேசவில்லை. இதனால் மனவிரக்தியில் சூரஜ்குமார் நேற்று(அக்.12) விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News October 13, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம்,அவினாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News October 13, 2025
திருப்பூரில் வட மாநில இளைஞர் குத்தி கொலை!

திருப்பூர் சிறுபூலுவபட்டி ரங்கநாதபுரம் தெய்வீக நகரில் ஹாஸ்டலில் தங்கி பணியாற்றிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) மற்றும் அனில் (28) ஆகியோர் நேற்று மது அருந்திய நிலையில் பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அனில், ஆகாஷை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க முயன்ற விக்கி புரோஜா (23) என்பவரும் காயமடைந்தார். வேலம்பாளையம் போலீசார் அனில் என்பவரை கைது செய்து விசாரணை!
News October 13, 2025
திருப்பூர் மக்களே நாளை கடைசி நாள்!

திருப்பூர் மக்களே தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தின் கீழ், 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.35,000 வழங்கப்படும். இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <