News August 12, 2025
திருப்பூர் மக்களே: உடனே புகார் அளிக்கலாம்!

திருப்பூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News August 12, 2025
திருப்பூரில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி APPLY NOW

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படவுள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8வது முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க <
News August 12, 2025
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளது . திருப்பூர் கலெக்டர் மணீஷ் எஸ். நர்னாவேர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது .
News August 11, 2025
திருப்பூரில் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை

நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மற்றும் விடுதிகளுடன் கூடிய மதுபான கடைகள் செயல்பட தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.