News September 20, 2025
திருப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

திருப்பூரில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே துறையுடன் இணைந்து, தபால் நிலையத்தின் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு பெறும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் காந்தி நகர் தபார் நிலையத்தில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, இதன் மூலம் தட்கல் முன்பதிவு சேவைகளை எளிதாக பெறமுடியும். மேலும் விபரங்களுக்கு 0421 – 2486288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 6, 2025
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

திருப்பூர் மக்களே, வீடுகள் வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News November 6, 2025
திருப்பூர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

திருப்பூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News November 6, 2025
திருப்பூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


