News June 26, 2024
திருப்பூர்: படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை

கலெக்டர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 200, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து 5 வருடங்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 05.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம், இப்பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் .அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 5, 2025
திருப்பூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

திருப்பூர் அரிசி கடைவீதியைச் சேர்ந்த நந்தினி. கடந்த 4 மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். ராமமூர்த்தியின் செயல்பாடு பிடிக்காததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் நேற்று ராமமூர்த்தி பேச மறுத்த நந்தினியை பின் தொடர்ந்து வீட்டிற்குச் சென்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
News November 5, 2025
திருப்பூர்: ரயில்வே வேலை! APPLY NOW

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.25,500-ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.


