News March 25, 2024

திருப்பூர்: கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

image

பொங்கலூர் அருகே பெருந்தொழுவிலிருந்து சாலையில் கிராவல் மண் கடத்தப்படுவதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அனுமதியின்றி 4 யூனிட் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த கிராவல் மண் கடத்திய கோவிந்தராஜ் நாச்சிமுத்து மற்றும் செல்ல குட்டி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தினர்.

Similar News

News October 27, 2025

திருப்பர்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 18- 33 வயதுடையவர்கள் https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் நவ.11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News October 27, 2025

வைட்டமின்-ஏ திரவம் இன்று முதல் வழங்கல்

image

திருப்பூர் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று அக்.27 முதல் நவ.1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 14 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் முகாம் நடைபெறும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

உடுமலை அருகே ரயில் மீது மோதி முதியவர் தற்கொலை

image

திருப்பூர் உடுமலை அருகே கோவையில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் ரயில் கோமங்கலம் பகுதியில் வந்த போது திடீரென முதியோர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்தார் இந்த விபத்தில் ரயில் மோதி தூக்கி எறியப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!