News August 6, 2025

திருப்பூர் காவல் அதிகாரி கொலை: தனிப்படைகள் அமைப்பு

image

திருப்பூர், மடத்துக்குளம் பகுதியில் நேற்றிரவு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 7, 2025

திருப்பூர்: இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

image

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE<<>> என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதை SHARE செய்யுங்கள்!

News August 7, 2025

திருப்பூரில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுண்டரில் பலி

image

குடிமங்கலத்தில் ssi சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் மணிகண்டனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற போது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றபோது, போலீசார் சுட்டதில் சம்பவயிடத்திலேயே மணிகண்டன் பலியானார். உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

News August 7, 2025

திருப்பூர்: தேடப்பட்டு வந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு!

image

திருப்பூர் குடிமங்கலம் பகுதியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்பவரை பிடித்த போலீசார், அவரை கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து மணிகண்டன், காவல் ஆய்வாளர் ஒருவரை வெட்டுவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் மணிகண்டம் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!