News September 15, 2025
திருப்பூர்: கணவனை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்

திருப்பூர்: அங்கேரிபாளையம் அருகே வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(25). இவர், கணவரை இழந்து மகனுடன் வசிக்கும் 28 வயது பெண்ணுடன் பழகியதில், அப்பெண் கர்ப்பமானார். இதையடுத்து, அந்தப் பெண்ணை பிரவீனின் தாயார் ஏற்க மறுத்துள்ளார். ஆகையால், பிரவீன் தன்னை ஏமாற்றி விட்டதாக அப்பெண் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் தற்போது வடக்கு அனைத்து மகளிர் போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 15, 2025
திருப்பூர்: ரயில்வே துறையில் வேலை வேண்டுமா..?

திருப்பூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
திருப்பூரில் துடிதுடித்து பலி!

திருப்பூர்: புத்தூர் பிரிவைச் சேர்ந்தவர் கணேசன்(55). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் தனது பைக்கில் சந்திராபுரம் சோதனை சாவடி பகுதியில் சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், தூக்கி வீச்சப்பட்டு, படுகாயமடைந்த கணேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(செப்.14) உயிரிழந்தார்.
News September 15, 2025
திருப்பூர்: குடிநீர் கேட்டு சாலை மறியல்

திருப்பூர் சின்னா நகர் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக, குடிநீர் பொதுமக்களுக்கு சீராக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முறையாக குடிநீர் வழங்க கோரி, சின்னாநகர் பகுதியில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.