News April 24, 2024

திருப்பூர்: ‘ஊழல் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா’

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களான லட்சுமணன், கந்தசாமி மத்திய அரசின் மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் ‘ஊழல் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில் மாடு, சீர்வரிசை தட்டுகளுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News January 25, 2026

திருப்பூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருப்பூர் மாவட்ட மக்கள் 0421-2482816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News January 25, 2026

திருப்பூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <>clip.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News January 25, 2026

திருப்பூர் அருகே அதிரடி கைது!

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு பேரை மூலனூர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!