News September 26, 2025

திருப்பூர்: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை!

image

திருப்பூர் மாவட்டத்தில் 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்.8க்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே <>க்ளிக் ப<<>>ண்ணுங்க. அதிகம் ஷேர் செய்து இளைஞர்களுக்கு உதவுங்க!

Similar News

News November 6, 2025

திருப்பூரில் இளைஞர் தற்கொலை

image

திருப்பூர், வேலம்பாளையம் தொகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(27). உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுபாஷ் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 6, 2025

திருப்பூரில் வாகனங்களை நிறுத்த திடீர் தடை

image

திருப்பூர் மாநகரின் வளர்மதி அருகே சுரங்க பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் சாய்பாபா காலனியில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை நிறுத்த தடை செய்யப்பட்டு போலீசார் சார்பில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது

News November 5, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 05.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம், இப்பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் .அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!