News December 30, 2024
திருப்பூர்: ஆட்சியர் அலுவலகத்தில் 317 மனுக்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கையில் தொடர்பாக, 317 மனுக்கள் அளித்திருப்பதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி!

திருப்பூர் 2-வது ரயில்வே கேட் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
திருப்பூர்: கோடிக்கணக்கில் சிக்கிய பணம்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 72 பறக்கும் படைகளும், 72 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. மார்ச் 15 முதல் நேற்று காலை வரை நடைபெற்ற சோதனையில், ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.8,59,74,187 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.1,62,67,377 மதிப்பிலான பரிசுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
News April 6, 2026
அவிநாசியில் பறக்கும் படையினர் ரூ.9,07,200 பறிமுதல்

அவிநாசி நாதம்பாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ரூ.9,07,200 இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


