News April 10, 2024
திருப்பூர் அருகே 2 தரகர்கள் கைது

காங்கேயம் திருவிக நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த சபரி விஜய், கணேஷ் ஆகிய இரண்டு பேர் வாடகைக்கு குடிவந்துள்ளனர். குடி வந்த நாட்களில் இருந்து அந்த வீட்டிற்கு அடிக்கடி பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் பாலியல் தொழில் தரகர்களான அவர்கள் இருவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.
Similar News
News February 11, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர், தாராபுரம் அரசு ஐ.டி.ஐ-யில் பிப்ரவரி 12 காலை 10 மணிக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது. கோவை மண்டலத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ முடித்தவர்கள் மற்றும் 8, 10, 12, பட்டப்படிப்பு முடித்தவர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு: 9499055695, என திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் 5 பேர் கைது

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வந்த வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(22) , விஷால் (18), ஆகாஷ் (24), உதயநிதி (18), ஜனார்த்தனன் (18) என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து சுமார் 22.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News February 11, 2026
திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் 5 பேர் கைது

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வந்த வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(22) , விஷால் (18), ஆகாஷ் (24), உதயநிதி (18), ஜனார்த்தனன் (18) என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து சுமார் 22.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


