News November 17, 2024
திருப்பூர்: அட நம்ம ஊரு ஆளுங்களுக்கு இவ்வளவு பாசமா?

தாராபுரம் பகுதியில் அவ்வப்போது மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் மனிதர்கள் ரெயின் கோட் போன்ற உடைகளை அணிந்து தங்களை நனையாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மழையில் நனைந்தபடி மேய்கிறது. இந்த நிலையில் தனது மாட்டிற்கு விவசாயி ஒருவர் பிளாஸ்டிக் பைகளை கவச உடையாக அணிவித்து மழையிலிருந்து மாட்டை பாதுகாத்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
Similar News
News March 2, 2026
திருப்பூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
திருப்பூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
திருப்பூர்: விவசாயிக்கு கத்தி குத்து

நத்தக்காடையூர் அருகே மருதுறை அரண்மனைகாடு பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (48) விவசாயி. இவருக்கும் காளிவலசு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (43) என்பவருக்கும் இடையே, நிலம் பிரச்சினையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பாலமுருகன் ஆத்திரம் அடைந்து, சிவசாமியை கல்லால் தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


