News August 17, 2025

திருப்பூர்:கரண்ட் பில் அதிகமா வருதா?

image

திருப்பூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News March 3, 2026

பல்லடம் தொகுதியில் இவரா?

image

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, பல்லடம் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

News March 3, 2026

அவிநாசி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கோவை ரத்தனபுரி, தாசப்பன் வீதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (41). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவினாசி அருகே கொச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, அவருக்கு பின்னால் வந்த லாரி, ஸ்டீபன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த ஸ்டீபன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தார்.

News March 3, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.2) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!