News March 25, 2025
திருப்பூரில் விவசாயிகள் 43 பேர் மீது வழக்கு

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தைச் சேர்ந்த 43 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 28, 2025
குடிநீர் பயன்பாடு தொடர்பாக அதிகாரிகள் அறிவிப்பு

கோடை காலம் முன்னரே திருப்பூரில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
News March 28, 2025
திருப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லாதீங்க. ▶ வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி, மது (ம) கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 27, 2025
திருப்பூர்: வலுப்பூர் அம்மன் கோயில்!

திருப்பூர், சேமலைக்கவுண்டம்பாளையத்தில், புகழ்பெற்ற வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறார். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என அழைக்கப்படுகிறார். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டு வந்தால், நிச்சயம் நோய் குணமாகுமாம். இத SHARE பண்ணுங்க.