News September 12, 2024

திருப்பூரில் விசாரணை முடிந்ததும் சென்னை அழைத்து வரப்படும்

image

அசோக் நகர் பள்ளியில், சர்ச்சை பேச்சில் சிக்கிய மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்கின்றனர். திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவின் அறக்கட்டளைக்கு சொந்தமான பரம்பொருள் அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையை முடித்துக் கொண்டு நாளை மகாவிஷ்ணுவை போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர்.

Similar News

News September 16, 2025

சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக் <<>>செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

சென்னை: உங்க ஏரியால எவ்வளவு மழை தெரியுமா?

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 15) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 68, எழும்பூர் – 42.8, கிண்டி – 27.4, மாம்பலம் – 59.6, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 4.3, புரசைவாக்கம் – 22, தண்டையார்பேட்டை – 61, ஆலந்தூர் 10.9, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 71.5 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

சென்னை: மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பலி

image

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ரமேஷ் (48) என்பவர் பயணம் செய்தார்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நுழைந்தபோது, ரமேஷ் ஓடும் ரயிலில் இருந்து தவறி நடைமேடையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!