News January 26, 2026
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்! அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் பெரியாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து விசாரித்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அறிவு மற்றும் மைதீன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், 12.2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 31, 2026
திருப்பூரில் மாணவர் பலி: டிரைவருக்கு 7 ஆண்டு சிறை

திருப்பூரில் கடந்த 2022-ல் கறிக்கோழி லாரி மோதி பொள்ளாச்சி கல்லூரி மாணவர் ஆரியன் உயிரிழந்த வழக்கில், திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, லாரி டிரைவர் ராஜ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பத்மா உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் விவேகானந்தம் ஆஜரானார்.
News January 31, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான விடுதிகளை நாள் முழுவதும் அடைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் மனிஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News January 31, 2026
திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 30.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


