News January 24, 2026
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்!

திருப்பூர், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போயம்பாளையம் பகுதியில், போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபர்களை விசாரணை செய்தபோது, அவர்களிடம் கூர்மையான வாள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராகவா ஆனந்த், மருதுபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து, வாள் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News February 6, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.06) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News February 6, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பல்லடம் நகர், மாதப்பூர், வெங்கிட்டாபுரம், மங்கலம் ரோடு, அனுப்பபட்டி, வீரபாண்டி, முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், சின்னக்கரை, இடுவம்பாளையம், அண்டிபாளையம், இடுவாய் கிழக்கு, சின்னாண்டிபாளையம், கிழக்கு, சின்னியகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 6, 2026
திருப்பூர்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


