News December 14, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த கன்ஷ்யாம் குமார் என்ற நபரை, போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கஞ்சா சாக்லேட் 1. 5 கிலோ மற்றும் 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News December 21, 2025
திருப்பூர்:+2 போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

திருப்பூர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் இந்த <
News December 21, 2025
பல்லடம் அருகே சோக சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வரும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளராக இருப்பவர் தனராஜசேகர். இவர் கல்லூரியில் உள்ள சிறு சிறு விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது, புல் அரக்கும் எந்திரம் உடலில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 21, 2025
திருப்பூருக்கு பெருமை: தட்டித்தூக்கிய நிறுவனங்கள்!

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக, நாடு முழுவதும் ஜவுளி ஏற்றுமதியில் சிறந்த நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பூரைச் சேர்ந்த 11 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக ஏற்றுமதி, சிறந்த செயல் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.


