News December 15, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

திருப்பூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில், நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்தவர் கருநீல நிற முழுக்கை சட்டையும், வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 5, 2026
கோடைகால குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராணி, ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
News March 5, 2026
திருப்பூர்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 5, 2026
திருப்பூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


