News November 1, 2025
திருப்பூரில் மாரத்தான் போட்டி

பேரறிஞர் அண்ணா மாராத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் துவங்கி, வஞ்சிபாளையம் சென்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லுரியில் முடிவடைய உள்ளது. இதில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு 0421 – 2244899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டா் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

திருப்பூர் மாவட்டத்தில் இன்று(நவ.1) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், மடத்துப்பாளையம், நம்பியாம்பாளையம், செம்பியநல்லுார், சேவூர் ரோடு, வ.உ.சி மற்றும் வீரபாண்டி துணை மின்நிலையம், ஆண்டிபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
திருப்பூரில் இன்று 11 மணிக்கு..! மக்களே ரெடியா

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் இன்று நவ.1-ம் தேதி காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, வட கிழக்கு பருவமழை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கிராம மக்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் தெரிவிக்கலாம். (SHARE)
News October 31, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 31.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


