News May 8, 2024
திருப்பூரில் மழை வேண்டி அதிகாரி மவுன விரதம்

திருப்பூர் மாநகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இதில் செயல் அலுவலராக சரவணபவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கோவிலில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நேற்று செயல் அலுவலர் 2 மணி நேரம் மவுன விரதத்தில் ஈடுபட்டார். மவுனவிரதம் இருந்ததை, பக்தர்கள் வரவேற்று பாராட்டினர்.
Similar News
News February 3, 2026
பிப்.05 திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 5-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பங்கேற்று, நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவுபெறலாம். இந்த தகவலை, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராயச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (பிப்.02) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News February 2, 2026
திருப்பூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


