News January 14, 2026

திருப்பூரில் போலீஸ் குவிப்பு

image

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜன.14, 15 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநகரின் முக்கிய பகுதிகளில் ஜன.14, ஜன.15-ம் தேதிகளில் காலை 8 மணி இரவு 10 மணி வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 12, 2026

மத்திய அமைச்சரை சந்தித்த திருப்பூர் தொழிற்சங்கம்

image

ஆயத்த ஆடை மேம்பாடு கவுன்சில் தலைவர் சக்திவேல் தலைமையில் திருப்பூர் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று டில்லியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரை சந்தித்து அமெரிக்கா வரி குறைப்பு,மற்றும் 38 நாடுகளிடம் போடப்படும் ஜவுளி ஓப்பந்தம் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்தனர்.

News February 12, 2026

திருப்பூர்: ஆதார் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App<<>> மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 12, 2026

திருப்பூர் அருகே சோகம்: பள்ளி மாணவன் விபரீத முடிவு!

image

திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த பந்தம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். இவர்களது மகன் கபிலன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!