News December 27, 2024
திருப்பூரில் பதின்ம வயது கர்ப்பம் அதிகரிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், டிசம்பர் மாதம் வரை இதுவரை 790, டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனர். இதே முந்தய ஆண்டில் 691 கர்ப்பம் தரித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 14.32% அதிகம் என கூறப்பட்டுள்ளது. இதனால் குழந்தை திருமணங்களும் கனிசமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
திருப்பூர் மக்களே முற்றிலும் இலவசம்!

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, காளான் வளர்ப்பு (ம) அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சூப், பிரியாணி, பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும். SHAREit
News August 22, 2025
திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாதம்தோறும் வெள்ளிக்கிழமை ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறுவது வழக்கமாக வந்தது. மூன்று மாத காலமாக மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறாததால், இன்று(ஆக.22) திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பெரும் திரளாக முகாமில் கலந்து கொண்டனர்.
News August 22, 2025
திருப்பூர் மருத்துவமனையில் செல்போனை மீட்ட போலீசார்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஊதியூர் அருகே ராசிபாளையத்தைச் சேர்ந்த ரேவதி(35) என்பவர் தனது தாத்தா நாச்சி(72) என்பவருடன் வந்தார். அப்போது தனது செல்போனை தவற விட்டதை கண்டுபிடித்து மருத்துவமனை முதல்வர் மனோன்மணி முன்னிலையில் திருப்பூர் மாநகர சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் முதல் நிலைக் காவலர் செல்வகுமார் ஆகியோர் ரேவதியிடம் ஒப்படைத்தனர்.