News October 31, 2025

திருப்பூரில் நாளை மின்தடை: உங்க ஏரியா இருக்கா?

image

அவினாசி ,வீரபாண்டி மற்றும் ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை, திருப்பூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவினாசி செயற்பொறியாளர் பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 31, 2025

திருப்பூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

திருப்பூர்: ஆதாருடன் பான் கார்டை இணைக்க எளிய வழி!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1.<> இங்கு கிளிக்<<>> செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News October 31, 2025

திருப்பூர் திடீர் போக்குவரத்து மாற்றம்!

image

திருப்பூர் நொய்யல் ஆற்றுப் பூங்கா சாலை சந்திப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக, நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள்: சாய்பாபா கோவில் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள்: கிரிஸ்டல் சந்திப்பு, நடராஜ் தியேட்டர் வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன. இது குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை 94981-81078 அழைக்கவும் என காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!