News September 4, 2025
திருப்பூரில் தெரிய வேண்டிய முக்கிய போன் நம்பர்!

திருப்பூர் மக்களே.., ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 7, 2025
அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

திருப்பூர் மேற்கு மாவட்டம், பல்லடம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்தவர் ஏ.சித்துராஜ். இவரை அந்த பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், சித்துராஜ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 6, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் அலுவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம்.
News September 6, 2025
திருப்பூர் அருகே இப்படி ஒரு அற்புத கோயிலா?

தாராபுரத்தில் மிகவும் பழமையான காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன்துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம். (SHAREit)