News September 26, 2025
திருப்பூரில் தீ குளித்த வாலிபர் உயிரிழப்பு

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த காவிரி நகரச் சேர்ந்தவர் பழனிச்சாமி. தையல் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த 20ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிர் இழந்தார்.
Similar News
News February 3, 2026
திருப்பூர்: பனியன் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி!

இந்திய பட்ஜெட் நேற்று தாக்கலான மறுநாளே இன்று திருப்பூர் பின்னலாடைக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 7 உயர்ந்துள்ளது. இது பின்னலாடைத்துறைக்கு பெரும் பின்னடைவாக பேசப்படுகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே அமெரிக்க வரிவிதிப்பு 50% பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பத் குறிப்பிடத்தக்கது.
News February 3, 2026
பிப்.05 திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 5-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பங்கேற்று, நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவுபெறலாம். இந்த தகவலை, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராயச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (பிப்.02) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


