News August 21, 2025
திருப்பூரில் திடீர் மாற்றம் தெரிஞ்சிக்கோங்க!

திருப்பூர், அணைப்பாளையத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், இன்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வஞ்சிபாளையம் – புஷ்பா சந்திப்பு: அவிநாசி சாலை அல்லது ரங்கநாதபுரம் வழியாகச் செல்லலாம்.சிறுபூலுவப்பட்டி வழியாக குமார் நகருக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுபூலுவப்பட்டிக்குச் செல்லும் வாகனங்கள் சலவை பட்டறை சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.SHARE பண்ணுங்க!
Similar News
News August 21, 2025
முருகானந்தம் கொலை வழக்கில் முன் ஜாமீன் ரத்து

தாராபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி வழக்கறிஞர் முருகானந்தம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி தாளாளர் தண்டபாணி உள்ளிட்ட சில குற்றவாளிகள் முன் ஜாமின் கேட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் மனதாக்கல் நேற்று செய்தனர். திருப்பூர் நீதிபதி முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.
News August 21, 2025
திருப்பூர்:வாடகைப் பிரச்னைக்கு ஒரே தீர்வு!

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
News August 21, 2025
அவிநாசியில் சாயம் கலந்த பட்டாணி பறிமுதல்

அவிநாசி கைகாட்டிப்புதுார் வாரச்சந்தையில் சாயம் கலந்த பட்டாணி விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் பிரபு சந்தையில் ஆய்வு நடத்தி, ரசாயன சாயம் பூசப்பட்ட 6 கிலோ பட்டாணியை ஒரு வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்தார். முதல் முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீண்டும் இதுபோல் நடந்தால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது