News February 5, 2025

திருப்பூரில் தற்காலிக பதவி உயர்வு 

image

திருப்பூர் மாவட்டத்தில் துணை தாசில்தார் மூவருக்கு, தாசில்தாராக தற்காலிக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில், காங்கயம் வாணிப கிடங்கு உதவி மேலாளராக பணிபுரியும் கதிர்வேல், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் குணசேகரன், மடத்துக்குளம் தாசில்தாராகவும், ‘ஓ’ பிரிவு தலைமை உதவியாளர் சபரிகிரி, பல்லடம் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News August 23, 2025

திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

image

திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 24 இருசக்கர வாகனங்கள் என 35 வாகனங்கள் வரும் 26 ஆம் தேதி ஏலம் இடப்படுகிறது. அவிநாசி மடத்துபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நடைபெறும் ஏல நிகழ்ச்சிகள், ரூ.5000 முன்வைப்புத் தொகையாக செலுத்தி, ஏலத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 23, 2025

திருப்பூர்: 10வது படித்தால் போதும் POLICE வேலை!

image

திருப்பூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 23, 2025

திருப்பூர்: சொந்தமாக பனியன் கம்பெனி தொடங்க ஆசையா..?

image

திருப்பூர் மக்களே ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.5 கோடி வரையிலான கடனுதவி NEEDS திட்டத்தின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. புதிதாக பனியன் கம்பெனியில் தொடங்க நினைப்போர் இத்திட்டத்தில் பயனடையலாம். இந்தக் கடனை திரும்பி செலுத்த 9 ஆண்டு கால அவகாசம், மானியத்துடன் 3% வட்டிக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே SHARE!

error: Content is protected !!