News December 30, 2025
திருப்பூரில் கூண்டோடு அதிரடி கைது

திருப்பூரைச் சேர்ந்தவர் சந்தனகருப்பன். இவர் தனது கைப்பேசி மூலம் இணைய வழியில் விளம்பரத்தை கண்டு பேசி, ரூ.53,000 பணம் கொடுத்துள்ளார். பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மும்பை சென்று மோசடி கும்பல் 13 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Similar News
News December 30, 2025
திருப்பூர்: மக்களே நாளை கடைசி நாள்!

திருப்பூர் மக்களே, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கும் நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் டிச.31 ஆம் தேதிக்குள் PAN அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. இந்த <
News December 30, 2025
காங்கேயம் அருகே விபத்து

காங்கேயம் டு நத்தக்காடையூர் சாலை எலந்தக்காடு அருகே சென்று கொண்டு இருந்த கல்லூரி பேருந்து மீது பின்னால் வந்த பைக் மோதியது. இதில், பைக்கில் சென்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 30, 2025
திருப்பூர்: கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய எண்கள்

▶️திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️விபத்து அவசர வாகன உதவி 102. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.


