News May 13, 2024
திருப்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை: 9 பேர் கைது

உடுமலையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலையில் மாற்றம் தென்பட்டது. சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து பரிசோதனை செய்ததில் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை செய்ததில் 9 பேர் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 9 பேரை போக்சோவில் நேற்றிரவு கைது செய்தனர்.
Similar News
News November 4, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 04.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவினாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 4, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, மாஸ்கோ நகர், குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 4, 2025
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த அமைச்சர் சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தற்போது தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள இல.பத்மநாபனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


