News May 2, 2024

திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம்

image

திருப்பூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை உரிய அனுமதி இல்லாமலும், அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமலும் செயல்பட்டு வருவதாகவும் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News November 4, 2025

திருப்பூர்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்

image

திருப்பூர் மக்களே, பட்டா மாற்றம், சிட்டா, சாதி சான்றிதழ், இருப்பீட மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு சாம் கண்டிப்பாக ஒருமுறையாவது விஏஓ, தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியது இருக்கும். அப்போது அங்கு அதிகாரிகள் முறையாக பணி செய்யாமல் லஞ்சம் கேட்டால் (0421-2482816) என்ற எண்ணில் புகார் அளிக்கவும். (SHARE பண்ணுங்க)

News November 4, 2025

பல்லடம் அருகே தீ பற்றி எரிந்த பேருந்து

image

பல்லடம் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்புறம் தீ பற்றி எறிய தொடங்கியது. தொடர்ந்து உள்ளே இருந்த 15 பயணிகள் பத்திரமாக எந்த சேதமும் இன்றி உயிர்தப்பினர். இத்தீவிபத்தில் பேருந்து முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமானது

News November 4, 2025

தாராபுரம் அருகே சோகம்!

image

தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் அருகே உள்ள நல்லி கவுண்டன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் குளத்துப்பாளையம் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியில் உள்ளார். இவர் பணி காரணமாக இருந்தபோது திடீரென உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த அவரது தாய் எதிர்பாராதமாக நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!