News December 8, 2025
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

திருப்பூர், இடுவாயில் 500 ஆண்டுகள் பழமையான சித்தி விநாயகர் கோயில் உள்ளது. விநாயகர் 5 தலைமுறைகளை கடந்து, குளத்தேரி பகுதியில் இருந்துள்ளார். பின்னர் 1995ஆம் ஆண்டு இடுவாய் மக்கள், சித்தி விநாயகருக்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தனர். சக்திவாய்ந்த சித்தி விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடுமாம். இதனால் வெளியூர்களில் இருந்து வந்து பக்தர்கள் விநாயகரை தரிசித்து செல்கின்றனர்.
Similar News
News December 8, 2025
திருப்பூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்ட காவல்துறை, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதாரம் இல்லாத தகவல்களை பரப்புவது சட்டவிரோதம் என்றும், இதனால் சமூக அமைதி பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. உண்மைதன்மை உறுதி செய்யாமல் தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. தவறான செய்திகள் பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
News December 8, 2025
திருப்பூர்: வாக்காளர்களே! SIR UPDATE

திருப்பூர் மக்களே தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 8, 2025
திருப்பூர்: நல்ல சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த <


