News August 20, 2024
திருப்பூரில் இன்று மின்தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலை, கோமங்கலம் புதூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஆக.20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். அதேபோல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்லடம் நாரணாபுரம் துணைமின் நிலையம், ஊதியூர் மற்றும் ராசாத்தாவலசு துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <
News November 9, 2025
திருப்பூரில் கைது! ஏன் தெரியுமா?

அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி, கணேசபுரம் வைஷ்ணவி கார்டனில், வெளிநாட்டினர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் படி நேற்று முன்தினம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அதில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
News November 9, 2025
திருப்பூரில் இங்கெல்லாம் மின்தடை

உடுமலை இந்திரா நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை நவ.10-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதூர். ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.


